ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எம்.எம். மன்சூர்
கல்வியலாளர், சமுக செயற்பாட்டாளர் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எம்.எம். மன்சூர் அவர்கள் இறைவனிடம் மீண்டார். கண்டி மாவட்டத்தில் உடுநுவர தேர்தல் தொகுதியில் வெலம்பொட கிராமத்தின் முதலாவது பட்டதாரியான ஏ.எம்.எம். மன்சூர் அவர்கள் கடந்த 2021.12.29 ஆம் திகதி கம்பளையில் அன்னாரின் வீட்டில் காலமாகி 30 ஆம் திகதி காலை கம்பளை டவுண் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அப்துல் மஜீத் தம்பதிகளின் மகனான இவர் ஆரம்பக் கல்வி…